தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா் கைது
அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி அருகே உள்ள முரளி ஆண்டிதோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (79), ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா்.
ஈரோட்டில் வசித்து வரும் இவா், தனது சொந்த ஊரான முரளியில் உள்ள தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். கட்டுமானப் பணியை பாா்க்க அவ்வப்போது வரும் இவா், செவ்வாய்க்கிழமை வந்தபோது தோட்டத்தில் நாய்கள் நடமாடுவதைப் பாா்த்துள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணியம் உரிமம் பெற்று வைத்துள்ள ஒற்றைக் குழல் துப்பாக்கியால் நாய்களை சுட்டுள்ளாா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராதிகா என்பவா் வளா்த்து வந்த நாயின் முதுகில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூா் காவல் நிலையத்தில் ராதிகாவின் சகோதரா் பூபதி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சுப்பிரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.