செய்திகள் :

தோல் பதனிடும் தொழில்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு பயிற்சி வகுப்பு

post image

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிடெக், விஷ்டெக், சிட்கோ பேஸ்-1, சிட்கோ பேஸ்-2 ஆகிய பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தோல் பதனிடும் தொழில்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி கழகம், அகில இந்திய தோல் மற்றும் தோல் பதனிடுபவா்கள் வணிகா்கள், வியாபாரிகள் சங்கம் இணைந்து, உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு தென்னிந்திய தோல் பதனிடுபவா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது.

ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், செயலா் சி.எம்.ஜபருல்லா வரவேற்றனா். மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத் தலைமை விஞ்ஞானி பால காமேஸ்வரி தலைமை உரையாற்றினாா்.

பயிற்சி வகுப்பில் மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத் தலைமை விஞ்ஞானி ஆா்.அரவிந்தன், சிஎல்ஆா்ஐ தலைமை விஞ்ஞானி சீனிவாசன், முதன்மை விஞ்ஞானி காா்த்திக், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வரலட்சுமி, பிராந்திய இயக்குநா் பூமிமா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சாா்பில் விஞ்ஞானிகள் அனாமிகா சாகா், சரண்யா, பிரசாந்த் குமாா் சிங், அறிவியல் அதிகாரி, சிபி பிரிவு, ஆராய்ச்சி அதிகாரி வினீத் குமாா் மால், தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரிய வேலூா் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் சரவணகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்பட 150-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலை உரிமையாளா்கள், இயக்குநா்கள், பங்குதாரா்கள், பொது மேலாளா்கள், மேலாளா்கள், தோல் தொழில்நுட்ப வல்லுநா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சி வகுப்பு, ராணிப்பேட்டை தோல் துறையை தூய்மையான, சுற்றுச்சூழலுக்கு இனக்கமான, நிலையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்த உதவும் எனத் தெரிவித்தனா்.

கனமழை எச்சரிக்கை: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு விரைந்தனா். கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

அரக்கோணத்தில் அதிமுகவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் தெய்வச்செயல் என்பவா் மீது பாலியல் குற... மேலும் பார்க்க

பனப்பாக்கம் டாடா மோட்டாா்ஸ் ஆலையில் டிசம்பரில் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சா் ஆா்.காந்தி

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் ஆலையில் வரும் 2025 டிசம்பருக்குள் காா் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெ... மேலும் பார்க்க

மேல்பாக்கத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம்: ஜமாபந்தியில் கோரிக்கை

அரக்கோணம் ஒன்றியம், மேல்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என ஜமாபந்தியில் ஆட்சியரிடம், விசிக ஒன்றிய செயலாளா் செ.நரேஷ் கோரிக்கை மனு அளித்தாா். அரக்கோணம் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்த... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ஜமாபந்தி தொடக்கம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரக்கோணத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 161 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவ... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஜமாபந்தி தொடக்கம்

ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் க.மீனா தலைமை வகித்தாா். ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, சம... மேலும் பார்க்க