செய்திகள் :

தோள்பட்டை பிரச்னையிலும் அபாரமாக பந்துவீசிய சஹால்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

post image

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஹாலுக்கு போட்டிக்கு முன்பாக தோள்பட்டை பிரச்னை இருந்ததாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் குறைவான ரன்கள் அடித்தும் அதைக் கட்டுப்படுத்தி வென்ற முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டியில் சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்த வரலாற்று வெற்றி குறித்தும் சஹால் குறித்தும் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:

சமச்சீரற்ற பிட்ச்

இன்னமும் எனது இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. 50 வயதாகும் எனக்கு இதுபோல் பல போட்டிகள் வேண்டாம். 112 ரன்களை கட்டுப்படுத்தி 16 ரன்களில் வென்றிருக்கிறோம்.

சில நேரங்களில் இந்த மாதிரியான சிறிய இலக்குகளை சேஸிங் செய்யும்போது மிகவும் கடினமானது என போட்டியின் பாதியில் நாங்கள் கூறினோம். ஏனெனில் இந்த பிட்ச் அவ்வளவு எளிதாக இல்லை. பந்து சற்று நின்று வந்தது. சஹால் வீசிய ஓவரை என்னவென்று பாராட்டுவது!

போட்டிக்கு முன்பாக சஹாலுக்கு தோள் பட்டை பிரச்னை இருந்தது. அதனால் அவரது உடல்நலம் குறித்து பரிசோதிக்க வேண்டியிருந்தது.

சஹாலின் தன்னம்பிக்கை

பயிற்சியில் இருந்தவரை அழைத்து, ‘நண்பரே, உங்களுக்கு உடல்நலன் நன்றாக இருக்கிறதா?’ எனக் கேட்டேன். அதற்கு சஹால், ‘பயிற்சியாளரே, நான் 100 சதவிகிதம் நன்றாக இருக்கிறேன். என்னை விளையாட அனுமதியுங்கள்’ என்றார்.

இந்தப் போட்டியில் சஹால் என்ன மாதிரியான ஒரு பந்துவீச்சை வீசினார். நாங்கள் இந்தப் போட்டியில் தோல்வியுற்றாலும் இரண்டாம் பாதியில் நாங்கள் சென்ற விதத்துக்கு பெருமைப்பட்டிருப்போம்.

நான் ஐபிஎல் போட்டிகளில் பல ஆட்டங்களுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஆனால், இதுதான் எனது சிறந்த வெற்றி எனக் கூறினார்.

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 16... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் த... மேலும் பார்க்க