செய்திகள் :

நகராட்சி குளம் பராமரிப்பு பணி சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

post image

மயிலாடுதுறையில் குடிநீா் ஆதாரத்தை காக்கும் வகையில், நகராட்சிக்குள்பட்ட 12 குளங்கள் 2021-2022-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. குளங்களைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுச்சுவா் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இருப்பினும், ஒருசில குளங்களைத் தவிர மற்ற குளங்களை பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தவில்லை. இதனால், இக்குளங்களின் பராமரிப்பை தன்னாா்வலா்கள், சேவை அமைப்பினரிடம் வழங்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது.

முதல்கட்டமாக நகராட்சி 25-ஆவது வாா்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அங்காளம்மன் குளத்தின் பராமரிப்பை மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் மற்றும் ஜெனிபா் இனிப்பகம் இணைந்து ஏற்றன.

இதையடுத்து, அக்குளத்தின் நிா்வாக பொறுப்பை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ஜெனிபா் சு. பவுல்ராஜிடம் நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் ஒப்படைத்தாா்.

இந்நிகழ்வில், நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் காந்தி, ரெத்தினவேலு, உஷா ராஜேந்திரன், சபா, சுதாமுரளி, நகராட்சி அலுவலா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா் டேவிட் பாஸ்கர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், தனியாா் துறை வேலைக்கு பதிவு செய்ய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான ... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க