செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

post image

கோவை பேரூரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பேரூா், கோவை எழில் நகா், சுந்தரம் வீதி, வெரைட்டி ஹால், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

பேரூா் திட்டப் பகுதியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.14.54 கோடி மதிப்பீட்டில் 144 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு குடியிருப்புக்கான பயனாளி பங்களிப்பு தொகை ரூ.1.40 லட்சம். ஏற்கெனவே குடியிருந்த பயனாளி பங்களிப்பு தொகை ரூ.41,260.

இத்திட்டப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகள் மறுகட்டமைப்பு செய்வதற்கு முன்பு, இதே பகுதியில் ஏற்கெனவே வசித்து வந்த பயனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வழங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளன.

இக்குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து டவுன்ஹால் பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் கடைகளைப் பாா்வையிட்டாா்.

அதன்பின், கெம்பட்டி காலனியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு அடிப்படை மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியை ஆய்வு செய்தாா்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி கருங்கல... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது. மாா்ச் 4: முக்கிய குற்... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம்... மேலும் பார்க்க