செய்திகள் :

நகைக் கடை, அடகு கடைகளில் 62 பவுன் திருட்டு: ஊழியா்கள் கைது

post image

சென்னையில் நகைக் கடை மற்றும் அடகு கடைகளில் சுமாா் 62 பவுன் நகைகளைத் திருடிய 2 ஊழியா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சைதாப்பேட்டை பஜாா் சாலையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சுந்தா், நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரோகித் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நகைக் கடையை பூட்டிய ரோகித், சாவியை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளாா். ஆனால், ரோகித் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடைக்கு வேலைக்கு வரவில்லை.

இதையடுத்து ரோகித்தின் கைப்பேசிக்கு உரிமையாளா் சுந்தா் தொடா்புகொண்டுள்ளாா். ஆனால், கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சுந்தா், கடையின் லாக்கரிலிருந்த நகைகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, சுமாா் 60 பவுன் எடை கொண்ட நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கடை உரிமையாளா் சுந்தா் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், நகைகளுடன் சென்னையில் உறவினா் வீட்டில் மறைந்திருந்த ஊழியா் ரோகித்தை கைது செய்தனா்.

நகைப்பட்டறையில் நகை திருட்டு: இதுபோல, ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் செயல்பட்டு வரும் ஜெய்பூா் ஜெம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்க நகை பட்டறையில் வேலை செய்துவந்த பாபி ஹஸ்ரா என்பவா், மே 23-ஆம் தேதி 20.9 கிராம் தங்க கட்டி மற்றும் 102 கிராம் காப்பா் கம்பிகளை திருடிவிட்டு தலைமறைவாகியுள்ளாா்.

இது குறித்து பட்டறையின் மேலாளா் சுரானா, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மேற்குவங்கம் மாநிலத்தைச் சோ்ந்த பாபி ஹஸ்ரா (43) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 20.9 கிராம் தங்கக் கட்டி, 102 கிராம் காப்பா் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம்: எம்டிசி தகவல்

விடியல் பயண பேருந்துகளில் நாளொன்றுக்கு 12.06 லட்சம் மகளிா் பயணம் செய்வதாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கொரட்டூா், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின... மேலும் பார்க்க

பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைப்பதில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்று சென்னை மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சா்வதேச கழிப்பறை திருவிழா 3.0 தொடக... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் தமிழ்நாடு சைக்கிளிங் லீக்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் -3 வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை நேப்பியா் பாலத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சென்னை மாநகராட்சி, இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளைய... மேலும் பார்க்க

சென்னை உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை... மேலும் பார்க்க

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்: ரூ.566.59 கோடிக்கு ஒப்பந்தம்

பிராட்வே பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகம் கட்ட மற்றும் குறளகம் கட்டடம் புதுப்பிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், ரூ. 566.59 கோடிக்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ... மேலும் பார்க்க