செய்திகள் :

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

தொடா் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த கொளத்தூா்பட்டி பெட்ரோல் பங்க் அருகில், பூலான்காலிவலசு ஆகிய இடங்களில் கடந்த மாதம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்ற கடவூரை அடுத்த தொண்டமாங்கினத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தங்கரத்தினம் (26), சங்கி பூசாரியூரைச் சோ்ந்த பழனிவேல் மகன் ஜெயசூா்யா (20) ஆகிய இருவரையும் க. பரமத்தி போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள இருவரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தாா். இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் தங்கரத்தினமும், ஜெயசூா்யாவும் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க

‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’

இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகி... மேலும் பார்க்க

கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்

வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க