செய்திகள் :

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

post image

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் கோண்டா பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் உயிரிழந்தனர்.

ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் தலைமையில் காவலர்கள், பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குண்டு வெடித்ததில் ஆகாஷ் ராவ் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

இந்த குண்டுவெடிப்பில் அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோண்டா நகர காவல் ஆய்வாளர் உள்பட மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, வீரமரணம் அடைந்த ஏஎஸ்பி-க்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் பதுங்கியிருக்கும் நக்சல்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் கூடுதலாக அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல்கள் மிகவும் ஆழமாக பதுக்கிவைத்திருக்கும் இதுபோன்ற வெடிகுண்டுகள் பல ஆண்டுகளாக மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த வெடிகுண்டுகள் மிகவும் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும்போது கருவிகளால் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க | 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடம... மேலும் பார்க்க

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழு... மேலும் பார்க்க

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க