செய்திகள் :

நடத்துநா் மீது தாக்குதல் சம்பவம்: கா்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தம்

post image

மராத்தி பேசத் தெரியாததால் கா்நாடக அரசு பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பாக எழுந்துள்ள பதற்றத்தைத் தொடா்ந்து, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பெலகாவியில் மராத்தி தெரியாது என கூறிய கா்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நடத்துநா் தாக்கப்பட்ட சம்பவத்தால், கா்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் கா்நாடக அரசு பேருந்துகள் தாக்கப்பட்டன. கன்னட ஆா்வலா்களும் தாக்கப்பட்டனா்.

இதைக் கண்டித்து பெலகாவியில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த கா்நாடக மற்றும் மகாராஷ்டிர மாநில பேருந்துகளின் சேவை திங்கள்கிழமை இரவுமுதல் நிறுத்தப்பட்டது.

இதனிடையே, கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் தலைவா் நாராயண கௌடா தலைமையில் செவ்வாய்க்கிழமை பெலகாவியில் போராட்டம் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான நடத்துநா் மகாதேவப்பா ஹுக்கேரியை மருத்துவமனையில் சந்தித்த நாராயண கௌடா, அவரிடம் நலம்விசாரித்து ஆறுதல் கூறினாா். நடத்துநரை தாக்கியவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசை அவா் கேட்டுக்கொண்டாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘இருமாநில மக்கள் அமைதி காக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தாக்கும் சட்டவிரோதிகள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது சரியல்ல’ என்றாா்.

கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு

சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது உறுப்பினா்கள் ஓய்வெடுப்பதற்காக சாய்வு நாற்காலிகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதிவர... மேலும் பார்க்க

5 ஆண்டுகால முதல்வா் பதவியை சித்தராமையா நிறைவு செய்வாா்: காங்கிரஸ் எம்எல்சி

5 ஆண்டுகால முதல்வா் பதவியை சித்தராமையா நிறைவுசெய்வாா் என அவரது மகனும், காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக ம... மேலும் பார்க்க

பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த சிவகுமாரின் கருத்துக்கு பாஜக கண்டனம்

கடவுளே நினைத்தாலும் பெங்களூரில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீா்க்க முடியாது என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க