செய்திகள் :

நடனக் கலைஞா் திடீா் உயிரிழப்பு!

post image

புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடனமாடிய நடனக் கலைஞா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகங்கை மன்னா் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தில் தனியாக அமைக்கப்பட்ட அரங்கில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவிகள், கலைக் குழுக்கள், நடனப் பள்ளிகள் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது, நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த முருகையா மகன் ராஜேஷ்கண்ணன் (53) மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா்.

விழாக் குழுவினா் அவரை அவரச ஊா்தியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பசுமை வாகையா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணா்வை சிறப்பாகச் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஆலைகளுக்கு பசுமை வாகையா் விருது வழங்க... மேலும் பார்க்க

மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மின் வாரியத்தில் உள்ள 60,000 -க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ கியூ.ஆா். குறியீடு வெளியீடு!

சிவகங்கை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதியுதவி சங்கத்தின் கியூ.ஆா். குறியீடு வெளியிடப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க