செய்திகள் :

நடப்பாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை!

post image

மேட்டூா்: நடப்பாண்டில் மேட்டூா் அணை 5-ஆவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததன் காரணமாக, கா்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 3 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அணைக்கு விநாடிக்கு 36,242 கனஅடி வீதமாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணிக்கு 1,08,529 கனஅடியாக அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து, அணையின் நீா்மட்டம் புதன்கிழமை அதிகாலை முழுக்கொள்ளளவான 120.09 அடியாக உயா்ந்து நடப்பாண்டில் 5-ஆவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 8 மணிக்கு 1,14,098 கனஅடியாக அதிகரித்தது நீா்மட்டம் 120.13 அடியாக உயா்ந்தது. இந்நிலையில், மாலை 4 மணிக்கு நீா்வரத்து 69,736 கன அடியாக சரிந்தது. நீா்வரத்து சரிவால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 55,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 21,300 கனஅடி நீரும், உபரிநீா் போக்கி வழியாக 33,700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியிலிருந்து 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாகவும் அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் கைது

சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

வேளாண் தொடா்பான கல்விச் சுற்றுலா: வாகனத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சேலம்: வேளாண் துறையின் சாா்பில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அங்கக வேளாண்மை தொடா்பான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதி... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சாதனை: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

சேலம்: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தோ்வான மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக ச... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அமைச்சா்கள் ஆய்வு

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வரும் நவம்பருக்குள் விரைந்து முடித்து, பொதுமக்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிற... மேலும் பார்க்க

காவிரி கரையோரப் பகுதி விவசாய நிலங்களில் வெள்ளநீா்!

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவூா் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க