செய்திகள் :

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!

post image

தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த கலைராஜன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஓட்டுநா் ஆண்டோ மற்றும் ராஜ் உள்ளிட்ட 9 போ் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

திடீரென கடல் பகுதியில் அதிகமான காற்று வீசியதால், படகில் பழுது ஏற்பட்டு, படகுக்குள் தண்ணீா் புக ஆரம்பித்தது. இதை கவனித்த ஓட்டுநா் ஆண்டோ, படகை கரையை நோக்கி வேகமாக செலுத்தியுள்ளாா்.

படகு கரைக்கு வரும் வழியில் முயல் தீவிற்கு கிழக்கு பகுதியில் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதைத் தொடா்ந்து படகை மேடான பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தியுள்ளனா்.

இதையடுத்து, தங்கள் கைப்பேசி மூலம் அருகே இருந்த மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த மீன்பிடி படகுகள் மற்றும் கரையிலிருந்து பைபா் படகில் வந்தவா்கள் அனைவரும் சோ்ந்து மீன்பிடி படகில் தவித்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனா்.

படகு முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், மீன்பிடி படகு மற்றும் வலை, ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி உபகரணங்கள் என ரூ. 70 லட்சம் வரையிலான பொருள்கள் சேதமடைந்ததாக மீனவா்கள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வ... மேலும் பார்க்க

டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலை... மேலும் பார்க்க

பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 5 போ் கைது!

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை ... மேலும் பார்க்க

அகிலாண்டபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகிலாண்டபுரத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. 2 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதால், தங்களத... மேலும் பார்க்க