செய்திகள் :

நடுவானில் மோசமான உடல்நிலை; சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்த மருத்துவர் - என்ன நடந்தது?

post image

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயார்க்கில் குழந்தை நல மருத்துவராக டாக்டர் டோரீன் பெனாரி பணியாற்றி வருகிறார்.

பிராங்பேர்ட்டிலிருந்து நியூயார்க்கிற்கு வணிக வகுப்பில் பயணம் செய்த இந்த மருத்துவர், தனக்கு உணவு ஒவ்வாமை இருப்பது குறித்து விமான பணியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

rep image

இருந்தபோதிலும் விமான ஊழியர்கள், அவருக்கு இரால் கொண்ட உணவை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடுவானிலேயே அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இதனால் அந்த மருத்துவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது அந்த மருத்துவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, SIA விமானம் SQ026 பயணித்தபோது, டாக்டர் டோரீன் பெனாரி, ஒரு கேபின் குழு உறுப்பினரிடம் தனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறினார்.

இருப்பினும், அவர்கள் இறால் அடங்கிய உணவை பரிமாறினர். ஒரு பகுதி சாப்பிட்டவுடன், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கேபின் குழு உறுப்பினரிடம் விசாரித்தபோது, அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி: மெட்ரோ ரயிலில் பாம்பு இருந்ததாக அலறிய பெண்களின் வீடியோ வைரல்; DMRC-யின் விளக்கம் என்ன?

டெல்லி மெட்ரோவின் பெண்கள் ரயில் பெட்டிக்குள் ஒரு பாம்பு வந்ததாகவும் அதனை கண்டு பயணிகள் அலறியடித்து சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.மெட்ரோ ரயில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்தா... மேலும் பார்க்க

2006-ல் நிலத்தை விற்ற தந்தை; நில உரிமையாளரிடம் 19 ஆண்டுபின் இழப்பீடு கோரும் மகள் - என்ன நடந்தது?

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 2006 ஆம் ஆண்டு தனது நிலத்தை ஒருவருக்கு பெற்றுள்ளார். விற்றவரின் மகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு ம... மேலும் பார்க்க

மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது நெருக்கம் - வருங்கால மருமகளை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்க... மேலும் பார்க்க

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உ... மேலும் பார்க்க

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர்... மேலும் பார்க்க

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஸாங் குவோஸின... மேலும் பார்க்க