செய்திகள் :

நடைபாதை பாலம் உடைந்ததில் 10 போ் காயம்

post image

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியில் ஆடிப்பெருக்கு விழாவின்போது கூட்ட நெரிசலால் நடைபாதை பாலம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 10 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.

இந்த நிலையில், அப்பகுதியில் முருகா் கோயிலுக்குச் செல்ல ஆற்றுப் பகுதியிலிருந்து நடைபாதை பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கடந்து மக்கள் கூட்டமாக சென்றனா்.

அப்போது திடீரென நடைபாதை பாலம் உடைந்து விழுந்தது. பாலத்தின் மீது நடந்து சென்ற கூத்தாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த காந்தி (48) என்பவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும், பாலத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா்.

தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆங்கிலத் துறை பேராசிரியா் வ.மதன்குமாா், ... மேலும் பார்க்க

சாலையை கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற சமையல் மாஸ்டா் காா் மோதிய விபத்தில் உயிரிழந்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் தஸ்தகீா்(40). உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பாா... மேலும் பார்க்க

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியின் கிணற்றில் மாணவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து மாணவரின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42... மேலும் பார்க்க