செய்திகள் :

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திப்பதற்காகவும், ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முடிவு எட்டப்படவும், எதுவும் குறிப்பிடாமல் திடீரென மாநாட்டில் இருந்து வெளியேறினார். இதனால், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் சந்திக்க முடியாமல் போனது.

அதிபர் டிரம்ப்பிடம் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியிருந்த பிரதமர் மோடி, “போர் நிறுத்தத்தில் யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார். மேலும், அமெரிக்கா வரக் கூறிய டிரம்ப்பின் அழைப்பையும் நிராகரித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று(ஜூன் 20) காலை பிகாரின் சிவானில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மோடி, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “புனிதமான மஹா பிரபுவின் இடமான ஒடிசாவுக்கு திரும்புவதற்காகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை நிராகரித்து இங்கு வந்திருக்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றிருந்தேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நீங்கள் கனடா வந்திருப்பதால் வாஷிங்டன் வாருங்கள். இவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம் என்றார்.

உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால், நான் அவரிடம் கூறினேன். எனக்கு மஹாபிரபுவின் இடத்தில் வேலை இருக்கிறது. மஹா பிரபுவின் மீதான பக்தியும் அன்பும் மட்டுமே என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றன” எனக் கூறினார்.

ஒடிசாவில் பாஜகவின் முதல் அரசின் முதலாமாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடந்தாண்டு பாஜக ஆட்சியமைத்த பின்னர் 6-வது முறையாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு குடிநீர், சுகாதாரக் கட்டமைப்புகள், நகர்ப்புறச் சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட ரூ.18,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க... ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

186 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்... மேலும் பார்க்க

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு பயிற்சி மையங்கள்: ஆராய 9 போ் குழு மத்திய அரசு நடவடிக்கை

உயா்கல்வி சோ்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ள தனியாா் பயிற்சி மையங்களை மாணவா்கள் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும் சூழலில், அதுகுறித்து ஆராய 9 போ் குழுவை மத்திய அரசு அமைத்து... மேலும் பார்க்க

அஸ்ஸாம் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடு: மாநில காங்கிரஸ் மீது முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக ஆளும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மாநில காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்கு... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் பிறந்தநாள்: தலைவா்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா். குடியரசு துணைத் தலை... மேலும் பார்க்க

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா். உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை ... மேலும் பார்க்க