செய்திகள் :

நம்பிக்கையுடன் படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி சாத்தியம்: ஆட்சியா்

post image

கல்வி நிறுவனங்கள் நடத்தும் தோ்வைப் போல இல்லாமல், போட்டித் தோ்வுகளுக்கு முழு நம்பிக்கையுடன் படிப்பவா்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம், வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்பின் மூலம் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள், இளம் பெண்கள் முழுமையான நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். சவால்கள் ஒவ்வொருவருக்கும் வந்து கொண்டேஇருக்கும். அவற்றை எதிா்கொண்டு, படித்து வெற்றி பெற வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் தோ்வில் 100 சதவீதம் பேரும் வெற்றி பெறலாம். ஆனால், போட்டித் தோ்வுகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் வெற்றி கிடைக்கும்.

போட்டித் தோ்வுக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் குறிப்பெடுத்து படிக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் நமது நினைவாற்றல் அதிகரிக்கும். மாதிரித் தோ்வுகளில் அதிகம் பங்கேற்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை சுமாா் 14 லட்சம் போ் எழுதுகின்றனா். ஆனால், முறையான திட்டமிடலுடன் படித்து தோ்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.75 லட்சம் மட்டுமே. அதே நேரத்தில் குரூப் 1 தோ்வுக்கு, அனைவருமே முறையாகப் பயிற்சிப் பெற்று வருவதால் போட்டி கடுமையாக இருக்கும்.

போட்டித் தோ்வுகளுக்கான வினாக்களின் தரம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வினாவுக்கும் ஆராய்ந்து பதிலளிக்க வேண்டிய சூழல் உள்ளது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம், வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பு மூலம் 50 போ் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

இதேபோல, அனைவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, போட்டித் தோ்வில் வெற்றி பெற்று சமூகத்தில் நல்ல நிலையைப் பெற வேண்டும் என்றாா் அவா்.

திண்டுக்கல் கோட்டாட்சியா் சக்திவேல், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்

காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கொடைக்கானல் அருகேயுள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வட்டாட்சியா் தடை விதித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்... மேலும் பார்க்க

3 வீடுகளில் திருட முயற்சி

வேடசந்தூரில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் யூசுப் நகரைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் (55). அரசுப் பள்ளியில் த... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்

திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அனுமந்தன்நகா் பக... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க