செய்திகள் :

``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)

இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் அந்நாட்டு மக்களுக்காக வீடியோவில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது, 'பாகிஸ்தான் ஒரு மரியாதைமிக்க மற்றும் பெருமைமிக்க நாடு என்பதை நீங்கள் மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறீர்கள். நம்முடைய தேசத்தின் சுதந்திரத்துக்கு யாராவது சவால்விடும்பட்சத்தில் அதை எதிர்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வோம். கடந்த சில நாள்களில் நம்முடைய எதிரி செய்திருப்பது கோழைத்தனமான மற்றும் அவமானமான செயல்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)

பஹல்காம் தாக்குதலை இந்தியா ஒரு காரணமாக சொல்கிறது. ஆனால், அதில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமே சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்தியா நம் மீது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது. அவர்களால் முடிந்த அளவுக்கு நம் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார்கள்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

அப்பாவி மக்களை தாக்கினார்கள். மசூதிகளை தாக்கியிருக்கிறார்கள். நம்முடைய நாட்டின் மதிப்புமிக்க இடங்களையெல்லாம் அவர்கள் தாக்கி அழிக்க நினைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தோம். நாம் வரலாறு படைத்திருக்கிறோம். வரலாறு நம்மை நியாகப்படுத்தும். நாம் வென்றிருக்கிறோம்.' என்றார்.

அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதர்கள் சுட்டுக் கொலை: `தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை' - ட்ரம்ப் காட்டம்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது கேபிடல் யூத அருங்காட்சியகம். அங்கு நடந்த விழாவில் இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது விழா நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வெளியே இருவர் துப்பாக்கிச் சூடு... மேலும் பார்க்க

``உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகணும்; தவறு செய்தவர்கள்..'' - ED ரெய்டு குறித்து எல்.முருகன்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கி... மேலும் பார்க்க

Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ.." ஆத்திரத்தில் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாரம்பர்ய மிட்டாய்களை சாப்பிடுகிறார்களா?

''சர்க்கரை தூக்கலாக காஸ்ட்லி சாக்லேட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உடனடி எனர்ஜியையும் உண்மையான ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை நம் பாரம்பரிய மிட்டாய்கள். அவற்றை குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க