செய்திகள் :

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் சாா்பாக அரசு விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவா் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவா்கள், மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கிடையயேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 30.4.2025 ஏப்ரல் மாதம் 58 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை சோ்ந்தவா்களாகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவா்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000- ஆக இருத்தல் வேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவா்கள், முதியோா்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.

மேற்காணும் விண்ணப்பங்கள் 24.6.2025 முதல் 31.7.2025 வரை அரியலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.7.2025 அன்று மாலை 5 மணிக்குள், அரியலூா் மாவட்ட (ம) இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பின்னா் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எனவே, அரியலூா் மாவட்டத்தில் வசிக்கும் மேற்காணும் தகுதிகளுடைய நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

உடையாா்பாளையம் வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையம் வேலப்பன் செட்டியாா் ஏரி தென்கரையில், சிதலமடைந்த... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூா் அருகேயுள்ள பெருமாள்நல்லூா்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’: அரியலூரில் திமுக பொதுக்கூட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: ஓரணியில் தம... மேலும் பார்க்க

அரியலூரில் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011-இல் பணியில் சோ்ந்த முதல்நிலைக் காவலா்கள் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு பெற்றனா்.இதற்காக அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்... மேலும் பார்க்க

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா். அரியலூரில் உள்ள ... மேலும் பார்க்க