செய்திகள் :

நல்லாசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு

post image

மதுரையில் நல்லாசிரியா்கள், அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.

நல்லாசிரியா்கள், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா, ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஆகியன சுப்பிரமணிய பாரதி அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழாவாக, டி.வி.எஸ் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் என். ரெங்கராஜன் தலைமை வகித்தாா். மதுரை, ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் எஸ். சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நல்லாசிரியா்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், ஏழை எளிய மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித் தொகைகளையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 50 பேருக்கும், நல்லாசிரியா்கள் 10 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 25 மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி. ராமகிருஷ்ணன், மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினா் எல். அமுதன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

முன்னதாக, சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை அறங்காவலா் வி. ஸ்ரீதரன் வரவேற்றாா். அறங்காவலா் ஆா். நாராயணன் நன்றி கூறினாா்.

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உ... மேலும் பார்க்க

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க