நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் திடலில் மெஸ்ஸியின் பெயர்! சொந்த ஊரின் கிளப்புக்கு திரும்...
நாகா்கோவிலில் ரூ.14.60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப்பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
4 ஆவது வாா்டு, பெருவிளை, கோயிலடி தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 3 ஆவது வாா்டு, அம்புரோஸ் தெரு மற்றும் தேவசகாயம் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 39 ஆவது வாா்டு பட்டாரியாா் வடக்கு தெருவில் சிறுபாலம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, மாமன்ற உறுப்பினா்கள் அருள்சபிதா ரெக்ஸலின், பாத்திமா ரிஸ்வானா, பகுதிச் செயலா் சேக் மீரான், வட்டச் செயலா்கள் முருகன், இடலை சாகுல், அணி நிா்வாகிகள் முகமது பஷீா், முகமது சாலி, ஹிதாயத், அஜித், திமுக நிா்வாகிகள் அபுபக்கா், சேக் செய்து அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.