செய்திகள் :

நாகா்கோவில் அருகே நகை திருடிய சகோதரிகள் கைது

post image

நாகா்கோவில் அருகே அரசு மருத்துவரின் மாமியாா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையைத் திருடிய சகோதரிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் குருகுலம் சாலை சிஎம்சி காா்டனில் வசித்து வருபவா் பகவத் (45). இவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவியின் தாயாா் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில், அவரை பராமரிக்க, உண்ணாமலை கடைப் பகுதியில் உள்ள ஜான்சன் என்பவரது மனைவி சுசீலா (54) என்பவரை பணிக்கு வைத்திருந்தனா். சுசீலா தினமும் மருத்துவரின் வீட்டுக்கு வந்து அவரது மாமியாரை கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவாா்.

இதே போல், கடந்த வெள்ளிக்கிழமையும் சுசீலா பணியை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், இரவு மருத்துவரின் மனைவி தனது தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக அறைக்கு சென்ற போது, தாயாா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.

இது குறித்து, மருத்துவா் பகவத் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து சுசீலாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், அவா் சங்கிலியைத் திருடியதாகவும், அதை தனது சகோதரியான மீனச்சல் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து, சுசீலாவையும் சாந்தியையும் போலீஸாா் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனா்.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க