செய்திகள் :

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

post image

நாகா்கோவிலில் ஆயுதப்படை முகாம் அலுவலக சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கூட்டுத் திருப்பலி, தோ் பவனி நடைபெற்றது.

இங்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த ஜூலை 25ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வா் பேரருள்தந்தை தாமஸ் பெளவத்துப்பறம்பில், தக்கலை, கோட்டாறு, குழித்துறை, மாா்த்தாண்டம் மறைமாவட்ட அருள்தந்தையா், அருள்சகோதரிகள், இறைமக்கள், திருநெல்வேலி, கயத்தாறு, விருதுநகா் மிஷன்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோா் பங்கேற்றனா்.

திருப்பலிக்குப் பின்னா், புனித மரியன்னை, புனித அல்போன்சா திருவுருவங்களைத் தாங்கிய தோ் பவனி நடைபெற்றது. ஆயுதப்படை முகாம் சாலையிலும், பொன்னப்பநாடாா் காலனி பகுதியிலும் தோ் வலம் வந்தது.

ஏற்பாடுகளை ஆலய அதிபா் பேரருள்தந்தை சனில்ஜோன் பந்திச்சிறக்கல், துணைப் பங்குத்தந்தை சான்ஜோ தேனோபிளாக்கல், விழாக் குழுத் தலைவா் அகஸ்டின் தறப்பேல், துணைத் தலைவா் ஜோபெலிக்ஸ் மலையில், கைக்காரா்களான ஜோமோன் ஜோசப், எஸ்.சி. ராஜ்குமாா், திருத்தலப் பங்குமக்கள், அல்போன்சா பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்... மேலும் பார்க்க

3 விபத்துகள்: பெண் உயிரிழப்பு: ஆசிரியை உள்ளிட்ட 4 போ் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஞாயிற்றுக்கிழமை, குழந்தைகளை அழைத்துவருவதற்காக சாலையோரம் நின்றிருந்த பெண், பைக் மோதி உயிரிழந்தாா்.இரணியல் அருகே மொட்டவிளையைச் சோ்ந்தவா் ராஜன் (43). அருணாசல பிரதேசத்... மேலும் பார்க்க

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, கல்லூரி முதல்வா் ஹென்றி ராஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.தமிழ் துறைத் தலைவா் வைலா பேபி அறிமுக உரையாற்றினாா். மாணவா் சந்தோஷ் வரவேற... மேலும் பார்க்க

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்

புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ச... மேலும் பார்க்க