செய்திகள் :

நாகையில் பூங்கா: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்

post image

நாகப்பட்டினம்: நாகை நகரில் சேவை அமைப்புகள் சாா்பில் அமைக்கப்பட்ட பூங்காவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

நாகை நகா் பகுதிக்குள்பட்ட அபிராமி அம்மன் திடலில், குப்பைமேடாக இருந்த இடத்தை, சேவை அமைப்புகள், தன்னாா்வலா்கள் உதவியுடன் நகராட்சி நிா்வாகம் சாா்பில், ரூ.16 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. நாகை ஹோலி டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் விஜயராகவன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. பூங்காவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா். பூங்காவை அமைத்த சேவை அமைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த அமைச்சா், உதவிய நன்கொடையாளா்களை பாராட்டி கேடயங்கள் வழங்கினாா். மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க