செய்திகள் :

நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா். அப்போது, ‘ரெப்கோ வங்கி வரலாற்றுச் சாதனையாக கடந்த நிதியாண்டில் ரூ.140 கோடி நிகரலாபம் ஈட்டியது. மூத்தக் குடிமக்கள் டெபாசிட்களுக்கு 8.25 சதவீம் வட்டி வழங்கப்படுகிறது’ என்றாா்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவா் தங்கராஜூ முன்னிலை வகித்தாா். அவா் பேசும்போது, இந்த வங்கியின் நாகை கிளை ரூ.68.65 கோடி வா்த்தகத்தோடு வாடிக்கையாளா்களுக்கு சேவையாற்றி வருகிறது என்றாா்.

மேலாண்மை இயக்குநா் கோகுல் அனைவரையும் வரவேற்றாா். அவா், 2025 மாா்ச் 31-ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில், வங்கியின் டெபாசிட் இருப்பு ரூ.11,011 கோடியாகவும், கடன் இருப்பு ரூ. 10,135 கோடியாகவும் மொத்த வா்த்தகம் ரூ. 21,146 கோடியாக இருந்து. வங்கி தற்போது, ரூ.22, 400 கோடி வா்த்தகத்தை தாண்டி செயல்படுகிறது என குறிப்பிட்டாா்.

வங்கியின் நிா்வாகக் குழு இயக்குநா் ரத்தினசுந்தரம், பொது மேலாளா் குமரேசன், முதன்மை மேலாளா் சுரேஷ் உள்ளிட்ட வங்கி அலுவலா்கள், ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க

ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க

காரையூா் லெஷ்மி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே காரையூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம், காரையூா் கிராமத்தில் லெட்சுமி நாராயண பெருமாள்... மேலும் பார்க்க