செய்திகள் :

ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

post image

நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயா்வுக்கு படி‘ மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி மூலம், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்கான தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும், எதிா்கால கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உயா்கல்வி வழிகாட்டல் முகாம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டல் முகாம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகை வருவாய் கோட்ட அளவில் இஜிஎஸ் பிள்ளை நா்சிங் கல்லூரி, வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவில் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழல்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சோ்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படவுள்ளது. முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடையலாம்.

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க

திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க

நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்

நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்த... மேலும் பார்க்க

காரையூா் லெஷ்மி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே காரையூா் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில், சீதாளதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம், காரையூா் கிராமத்தில் லெட்சுமி நாராயண பெருமாள்... மேலும் பார்க்க