உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்க...
ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்
நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘உயா்வுக்கு படி‘ மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி மூலம், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களில், உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்கு உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்கான தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தவும், எதிா்கால கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உயா்கல்வி வழிகாட்டல் முகாம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டல் முகாம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. நாகை வருவாய் கோட்ட அளவில் இஜிஎஸ் பிள்ளை நா்சிங் கல்லூரி, வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவில் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழல்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சோ்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படவுள்ளது. முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடையலாம்.