நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தில் கைது
நாகையில் 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த ஜான்பால் (42) மீது கஞ்சா கடத்தல் வழக்கும், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்த காா்த்தி (29) மீது பல்வேறு குற்றச்செயல் வழக்குகளும், பரவை பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (42), தெற்கு பொய்கைநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன்(38) ஆகியோா் மீது கொலை வழக்கு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் உள்ளது.
இதையடுத்து 4 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண்கபிலன் பரிந்துரையின்பேரில் அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஜான்பால், காா்த்தி, மகேஸ்வரன், மணிவண்ணன் ஆகிய 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.