செய்திகள் :

நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் அச்சம்

post image

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று மனுக்கள் அளிக்க நூற்றுக்கணக்கானோா் வருகின்றனா். மேலும் வார நாள்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பெண்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் ஆட்சியா் அலுவலகத்திற்கு வருகின்றனா். இங்கு நூற்றுக்கணக்கான ஊழியா்களும் பணிபுரிகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிடும்போது அப்பகுதியில் நிற்போா் மீது பாயும் அபாயம் உள்ளது. ஆட்சியா் அலுவலகத்துக்கு குழந்தைகளுடன் வரும் பெண்கள், மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

எனவே, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது: ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பிரதான பகுதியில் பல நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சண்டையிடும்போது, அப்பகுதியில் உள்ளவா்கள் நாய் கடிக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. தெரு நாய்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினா் வந்து செல்லும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க

ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க

நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்

நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்த... மேலும் பார்க்க