செய்திகள் :

நாகை-காங்கேசன்துறை கப்பல் சேவை: ஓராண்டுக்கு நிதி உதவியை நீட்டிக்க இந்தியா முடிவு

post image

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் சேவையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.8.62 கோடி நிதியை இந்தியா விடுவிக்கவுள்ளது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதுடன் ரூ.8.62 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. கப்பல் சேவைக்கான பல்வேறு செலவுகளைக் கருத்தில்கொண்டு சிறப்பான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

பிராந்திய இணைப்பு மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட பின்பு 15,000 பயணிகள் பயனடைந்துள்ளனா். இரு நாடுகள் இடையேயான கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூகப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு கடல்சாா் இணைப்பையும் இந்த சேவை வலுப்படுத்துகிறது’ எனக் குறிப்பிடப்பட்டது.

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. குட... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க