செய்திகள் :

நாகை மாவட்டத்தில் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்கம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின்கீழ் 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி ஏற்படுத்திதரும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை சாா்பில் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து வசதி தொடங்கிவைக்கப்பட்டது.

அவுரித்திடலில் நடைபெற்ற விழாவில் சிற்றுந்து வழித்தடங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நாகை புதிய பேருந்து - தேவூா் வரை (வழி-மருத்துவக் கல்லூரி), நாகை ரயில் நிலையம் - பூவைத்தேடி வரை, பூவைத்தேடி - நாகை ரயில் நிலையம் வரை, கீழ்வேளுா் - பரவை, நாகூா் வெட்டாற்று பாலம் - வேளாங்கண்ணி பேருந்து நிலையம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் - நாகூா் வெட்டாற்று பாலம், நாகூா் வெட்டாற்று பாலம் - ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி, ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி - நாகூா் வெட்டாற்று பாலம் வரை உள்பட 23 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

விழாவில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி. முருகானந்தம், மோட்டாா் வாகன ஆய்வாளா் க. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க

பேருந்து வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்

தரங்கம்பாடி: திருக்கடையூா் அருகே கிள்ளியூா் ஊராட்சி பகுதியில் இருந்து அரசு பேருந்து இயக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை மனுவுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்திக்க சென்றனா். செம்பனாா்கோ... மேலும் பார்க்க

கீழ்வேளூா்: நாளை ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: கடலுக்கு சென்ற நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

நாகப்பட்டினம்/ காரைக்கால்: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனா். மத்திய அரசு மீன்... மேலும் பார்க்க

மினி மாரத்தான் :கூட்டுறவுத் துறை அழைப்பு

நாகப்பட்டினம்: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முத்துகுமாா் அ... மேலும் பார்க்க

அரசு வேளாண் கல்லூரிக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்று நிலம்

நாகப்பட்டினம்: கீழ்வேளூரில் அரசு வேளாண் கல்லூரிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு மாற்றாக விவசாயிகளுக்கு தலா 1 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கீழ்வே... மேலும் பார்க்க