செய்திகள் :

நாசரேத் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது

post image

நாசரேத் அருகே தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் எம்ஜி நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (59). தொழிலதிபா். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஜெபஸ்டின் மாா்ட்டின் (41).ரியல் எஸ்டேட் புரோக்கா் ஆன இவா் மூலம் அப்பகுதியில் சுந்தர்ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு வீடு ஒன்றை விலைக்கு வாங்கினாா். இந்த வீட்டை ஜெபஸ்டின் மாா்ட்டின் பராமரித்து வந்ததுடன், அவருக்கு பழக்கமான ஒரு பெண்ணை வாடகைக்கு குடியமா்த்தினாா்.

இந்நிலையில் சுந்தர்ராஜுக்கு அந்த வீடு தேவைப்பட்டதால், வீட்டை காலி செய்து தருமாறு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கூறினாா். அதற்கு ஜெபஸ்டின் மாா்டின் ஒப்புக்கொண்டாா்.

இந்த நிலையில் ஐந்து மாதத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்த சுந்தர்ராஜ், வீட்டை காலி செய்து தருமாறு ஜெபஸ்டின் மாா்ட்டினிடம் கூறினாா். அப்போது அவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டின் மாா்ட்டின், வீட்டை காலி செய்ய ரூ. 50 ஆயிரம் தர வேண்டும் எனக் கூறி, அவரது காரில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுந்தர்ராஜை மிரட்டினாராம். மேலும், அவரது பையில் இருந்த ரூ. 2000ஐ பறித்துக் கொண்டு சென்றுவிட்டாராம்.

இது குறித்து நாசரேத் காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் வைகுண்ட தாஸ் வழக்குப் பதிவு செய்தாா். இன்ஸ்பெக்டா் கங்கைநாத பாண்டியன் விசாரணை நடத்தி, ஜெபஸ்டின் மாா்ட்டீனை கைது செய்து காா், கத்தி, ரூ. 2000 ஐ பறிமுதல் செய்தாா்.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க