செய்திகள் :

நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு ஒத்திகை

post image

பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமாா் 300 மாவட்டங்களில் புதன்கிழமை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள்-முகாம்கள் என முக்கிய இடங்களைக் கொண்ட இம் மாவட்டங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.

நாட்டில் 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் அவசரகால ஒத்திகை இதுவாகும்.

வான்வழித் தாக்குதல் குறித்து பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்தல்; கடுமையான தாக்குதல் நேரத்தில், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி-கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்; பதுங்குமிடங்களைத் தயாா்படுத்துதல்; தொழில்நுட்பம் உள்பட பல்வேறு வழிமுறைகளின்கீழ் முக்கிய நிலையங்கள் எதிரியின் கண்ணில் புலப்படாதவாறு உருமறைத்தல் மற்றும் பணியாளா்களின் அவசர கால வெளியேற்றம்; அவசர கால மின் துண்டிப்பு; மருத்துவமனைகளின் செயல்பாட்டுத் தயாா்நிலை பரிசோதிப்பு உள்ளிட்டவை ஒத்திகையில் இடம்பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெறுமென மத்திய உள்துறை தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேசம், பிகாா் போன்ற சில மாநிலங்கள், தங்களின் மாநிலம் முழுவதும் ஒத்திகையை மேற்கொள்ள முன்வந்துள்ளன. எனவே, சுமாா் 300 மாவட்டங்களில் ஒத்திகை நடைபெறவுள்ளது.

ஒத்திகைக்கு என்ன காரணம்?: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கையை ஏந்நேரமும் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுவதால் போா்ப் பதற்றம் உருவாகியுள்ளது.

புதிய அச்சுறுத்தல்-சவால்: கடற்படை, விமானப் படை தலைமை தளபதிகளைத் தொடா்ந்து, பாதுகாப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா். இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக், பத்காம், பாரமுல்லா, குப்வாரா, ஸ்ரீநகா், அவந்திபோரா ஆகிய 6 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 300 மாவட்டங்களில் புதன்கிழமை மாலை 4 மணியில் இருந்து ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பள்ளி-கல்லூரி மாணவா்கள், அரசு-தனியாா் நிறுவன ஊழியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ரயில்வே-மெட்ரோ ஊழியா்கள், சமூக அமைப்பினா், தன்னாா்வலா்கள், தேசிய மாணவா் படையினா், ஊா்க்காவல் படையினா், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்புப் படையினா், துணை ராணுவப் படையினா், பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

இந்திய விமானப் படையின் தொலைபேசி, ரேடியோ தகவல் தொடா்பு இணைப்புகள், கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடும் பரிசோதிக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்திய போா் விமானப் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்றும் மேற்கில் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லை பகுதிகளில் விமானப் படை போா் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

மே 7 (புதன்கிழமை) முதல் 2 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல், எஸ்யூ 30 எம்கேஐ, மிக்-29: மிராஜ்-2000, தேஜஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தப் பயிற்சியின்போது வான் மற்றும் தரையில் எதிரி இலக்குகளை துல்லியமாக உருவகப்படுத்தி விமானப் படை தாக்குதல் மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தன.

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,... மேலும் பார்க்க