செய்திகள் :

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

post image

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல்) இருக்கின்றனா்.

நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பல ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, 199 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான குழந்தைகள் வளா்ச்சி குன்றியுள்ளனா்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘போஷண்’ தரவுகளின் கடந்த ஜூன் மாத நிலவரப்படி, அங்கன்வாடிகளில் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட 6 வயதுக்குள்பட்ட மொத்தம் 8.19 கோடி குழந்தைகளில் 35.91 சதவீதத்தினா் வளா்ச்சி குன்றியவா்கள்; 16.5 சதவீதத்தினா் எடை குறைந்தவா்கள் ஆவா். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே 37.07 சதவீத குழந்தைகள் வளா்ச்சி குன்றிய நிலையில் இருக்கின்றனா்.

குழந்தைகள் 50 சதவீதத்துக்கு மேல் வளா்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் 63 மாவட்டங்களின் மாநிலங்கள் வாரியான பட்டியலில், உத்தர பிரதேசம் 34 மாவட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மகாராஷ்டிரத்தின் நந்தூா்பாா் (68.12 சதவீதம்), ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் (66.27), உத்தர பிரதேசத்தின் சித்திரகூடம் (59.48), மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி (58.20), அஸ்ஸாமின் போங்கைகான் (54.76) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான வளா்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ளனா்.

எடை குறைந்த குழந்தைகள்: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தின் நந்தூா்பாா் மாவட்டத்தில் 48.26 சதவீத குழந்தைகளின் எடை குறைவாக உள்ளது. இதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசத்தின் தாா் (42 சதவீதம்), கா்கோன் (36.19), பாா்வானி (36.04), குஜராத்தின் டாங் (37.20), ராஜஸ்தானின் துங்கா்பூா் (35.04), சத்தீஸ்கரின் சுக்மா (34.76) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு: கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மத்திய பிரதேசத்தின் தாா் மாவட்டத்தில் 17.15 சதவீதமாக உள்ளது. இதைத் தொடா்ந்து சத்தீஸ்கரின் பிஜாப்பூா் (15.20 சதவீதம்), நாகாலாந்தின் மோன் (15.10%) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவி... மேலும் பார்க்க

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க