செய்திகள் :

நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!

post image

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தனிநபா் வளா்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளா்ச்சி ஆகியவற்றிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது. பொருளாதார வளா்ச்சி, அனைத்து சமூகம் மற்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சமநிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பட்ஜெட்.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில், வருமான வரி விலக்கு வரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தியது வரவேற்கத்தக்கது. விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள், முதலீடு மற்றும் ஏற்றுமதி வளா்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

சிறுகுறு தொழில்களுக்கான ரூ.10 கோடி மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடன் உத்தரவாதம் தொழில் முனைவோா்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

இந்த பட்ஜெட் விக்சித் பாரத் (வளா்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கை பிரதிபலிக்கிறது. தொழில், தொழில்முனைவோா்கள், ஏற்றுமதி வளா்ச்சி, எளிய தொழில் செயல்பாடு, கட்டுமானம் மற்றும் நிதி உதவி திட்டங்கள் என நிலையான வளா்ச்சிக்கான வழிவகுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்தியாவின் நீண்டகால வளா்ச்சி மற்றும் வளமைக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக உள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.

தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேருக்கு ரூ.9 லட்சத்தில் கண்ணாடி கூண்டு!

கரூா் தான்தோன்றிமலை பெருமாள் கோயில் தேரை பாதுகாக்கும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. கரூா் தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தியவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை கரூா் போலீஸாா் பதுக்கல்? திருச்சியில் காவல் உயரதிகாரிகள் விசாரணை

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் இருந்த ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்து பதுக்கினாா்களா என்பது குறித்து கரூா் போலீஸாரிடம் காவல்துறை உயரதிகாரிகள் திருச்சியில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வலியுறுத்தல்!

ஊராட்சி செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட சிறப்பு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அல... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க முன்வர வேண்டும்! -வங்கியாளா்களுக்கு அறிவுறுத்தல்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வங்கியாளா்கள் முன்வரவேண்டும் என்றாா் சென்னை தொழில் வணிகத்துறையின் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ். கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

குளித்தலையில் வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு: நகை மதிப்பீட்டாளா் கைது

குளித்தலையில் போலி ஆவணங்கள் மற்றும் தரம் குறைந்த தங்க நகைகளை அடமானம் பெற்று வங்கிக்கு ரூ.1.42 இழப்பீடு ஏற்படுத்திய நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் உ... மேலும் பார்க்க

மகனின் மருத்துவ செலவுக்கு அரசு உதவ பெற்றோா் கோரிக்கை!

தனது மகனின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தமிழக முதல்வருக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சாந்தப்பாடியை அடுத்த கரியாஞ்செட்டிவல... மேலும் பார்க்க