செய்திகள் :

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

post image

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 தலைவர் சோனியா காந்தியின் சிந்தனையில் உருவானது என்று காங்கிரஸ் உறுப்பினர் பிரணிதி ஷிண்டேவின் கருத்துக்கு மத்திய உணவு அமைச்சர் பதிலளித்தார்.

தேர்தலுக்காக மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் காங்கிரஸ் 2013இல் கொண்டு வந்தது. இது சீரற்ற முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் விதிகள் கூட வகுக்கப்படவில்லை என்று ஜோஷி கூறினார்.

2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது, ​​ஏழைகளின் வலியைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு இலவச உணவு தானியங்களை உறுதி செய்வதற்கான முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டதாக அவர் கூறினார்.

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்களைப் பிரதமர் மோடி வழங்கி வருகிறார். ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மோடி அரசு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. இதன் கீழ் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டில் எங்கும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க