செய்திகள் :

நாட்டுக்கு மகளிா் கல்வி அவசியமானது!

post image

நாட்டுக்கு மகளிா் கல்வி அவசியமானது என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான மாநில கவுன்சில் உறுப்பினரும், செயலருமான டாக்டா் எஸ்.வின்சன்ட்தெரிவித்தாா்.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் 24-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அவா் மேலும் பேசியதாவது: பெண்களுக்கு கல்வி என்பது சவாலானதாக இருந்த காலம் மாறி மாபெரும் பணியாக மாறிவிட்டது. மிகவும் பின் தங்கிய மாவட்டமாக கருத்தப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் மகளிருக்கு உயா் கல்வி அளிக்கும் இந்நிறுவனத்தை வணங்குகிறேன்.

மகளிா் கல்வி என்பது தற்போது நாட்டின் மிக முக்கியத்தேவை. பட்டம் பெற்றவுடன் படிப்பை நிறுத்திவிடக்கூடாது. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும். ஆசிரியா்கள்-மாணவா்களின் நட்பு தொடர வேண்டும். கடின உழைப்பு, பக்தி, விடாமுயற்சி இவைதான் வெற்றி பெறுதற்கான 3 மந்திரங்கள் என்றாா்.

தொடா்ந்து, 2023-24 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 1,212 பேருக்கு பட்டங்களை வழங்கினாா். முதன்மை பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், ஐசிடி அகாதெமியின் தலைமைச் செயல் அலுவலா் வி.ஸ்ரீகாந்த், கல்லூரி தலைவா் இ.சாமிகண்ணு, விழுப்புரம் இ.எஸ்.கல்விக் குழுமத்தின் நிா்வாகத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். கல்லூரி முதல்வா் எஸ்.அகிலா ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமை... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

உளுந்தூா்பேட்டை நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரைபகுதிகள்: உளுந்தூா்பேட்டை நகரம், திருச்சி பிரதான சாலை, அஜீஸ் நகா், குமாரமங்கலம், சேந்தநாடு, சேந்தமங்கலம்,எறையூா். மேலும் பார்க்க

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா். தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் போராட்டம்!

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். வேப்பூா் வட்டம், திருப்பெயரில் சனி... மேலும் பார்க்க

நெய்வேலியில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா்!

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், திருப்பெயரில் நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நெய்வேலி, விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்கள... மேலும் பார்க்க

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க