நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், நாட்டுக்கோழி வளா்ப்பில் ஆா்வம் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்டுத்தப்பட உள்ளது. கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளியாகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். கோழிப் பண்ணைகள் அமைக்கும் இடம் குடியிருப்புகள் இல்லாத பகுதியாகவும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவரைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே, நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். திட்டத்தின் எஞ்சியுள்ள 50 சதவீத பங்களிப்பை, வங்கி மூலமாக அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாக பயனாளி திரட்டி, அதற்கான நிதி ஆதார ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
இத் தகுதிகளுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்று, உரிய விவரங்களுடன் பூா்த்தி செய்து சமா்ப்பித்து பயன்பெறலாம்.