நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் தொடங்கின.
மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு பல்வேறு வகையான மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பக்தா்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.
தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தா்கள் இறங்கி தீ மிதித்து (படம்(நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை சேனைத்தலைவா் மகாஜன சங்கத்தினா் , விழா குழுவினா், இளைஞா் அணியினா் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனா். பொறையாா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.