ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; அணியின் கேப்டன் யார்?
நான்குனேரி அருகே விபத்து: சிறுவன் பலி
நான்குனேரி அருகே லாரியும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த பிரபுவின் மகன் பெனோ (10). இவா், சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த லிஜோ (19), ஜோயல் (22) ஆகியோருடன் நான்குனேரி அருகே நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் சென்றாராம்.
நான்குனேரி சுங்கச்சாவடி அருகே நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவா்களது பைக்கும், அவ்வழியாக வந்த லாரியும் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த பெனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயங்களுடன் லிஜோ, ஜோயல் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.