செய்திகள் :

``நான் தான் பாமக தலைவர்..'' - தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ்

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு முடிந்தப்பாடில்லை.

கடந்த 5-ம் தேதி, தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து அன்புமணியின் பெயரும், அவரது ஆதரவாளர்களின் பெயரும் நீக்கப்பட்டது.

இதன் பின்னர், ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்து, அன்புமணி பெயர் நீக்கப்பட்டது.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

கடந்த 8-ம் தேதி, ராமதாஸ் தலைமையில் ஓமந்தூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பலரும், அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.

மேலும், பாமகவில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸிற்கே உள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிற்கே முழு அதிகாரம் உள்ளது போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணியின் தலைவர் பதவி கடந்த மே மாதம் 28-ம் தேதியோடு முடிந்தது. இதன் பின்னர், மே 29-ம் தேதி அன்று ராமதாஸ் அந்தப் பதவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், ராமதாஸ் இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தான் பாமகவின் தலைவர் என்றும், கட்சியின் சின்னத்தை அவர் தான் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார். பிரதமர் மோடியை அடிக்கடி புக... மேலும் பார்க்க

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்ப... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று ந... மேலும் பார்க்க