செய்திகள் :

``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்

post image

பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி.

டெல்லி மயூர் விஹாரில் மலையாள மொழிபேசும் மக்கள் மத்தியில் நேற்று பிரசாரம் செய்த சுரேஷ்கோபி பேசுகையில், "பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்தவர்தான் எப்போதும் நியமிக்கிறார்கள். அது நாட்டின் சாபமாகும். அதை மாற்றி பழங்குடியினர் நலன் சார்ந்த அமைச்சர்களாக பிராமணரையோ, நாயுடுவையோ நியமிக்க வேண்டும். அப்படி நியமிப்பதால் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அது என்னுடைய விருப்பமும், கனவும் ஆகும். 2016-ம் ஆண்டு நான் எம்.பி ஆனது முதல் இதை பிரதமரிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். பட்டியலின சமூகத்தின் நலனை நிர்வகிக்கும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பதவியை வழங்கும்படி கேட்டேன்" என பேசியிருந்தார்.

சுரேஷ் கோபி | Suresh Gopi
சுரேஷ் கோபி | Suresh Gopi

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், பழங்குடியின மக்களுக்கு எதிரானவர் என எதிர்கருத்துகளும் எழுந்தன. அதே சமயம் சுரேஷ்கோபி தனது பேச்சின் முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், "பட்டியலின மக்கள் நலத்துறைக்கு முன்னேறிய சாதியினரையும், முன்னேறிய சாதியினர் வளர்ச்சிக்கென துறைக்கு பட்டியலினத்தவரை அமைச்சராக  நியமிக்க வேண்டும். இந்த பரிமாற்றம் ஏற்பட வேண்டும்" என பேசியிருந்தார்.

`திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்...'

சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் தனது பேச்சுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், "டெல்லி தேர்தலில் எனது பிரசாரத்தில் நான் பேசியதை சொந்த விருப்பத்துக்காக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் நிலவும் சாதி வித்தியாசங்களை தாண்டி ஒவ்வொரு இந்தியரையும் சமமாக பார்க்கவேண்டும் என்பது பாபாசாகேப் முன்வைத்த பெருங்கனவாகும். இந்த சமத்துவத்தின் ஒருபகுதியாகத்தான் பட்டியலின மக்களை முன்னேறிய வகுப்பினர் பாதுகாக்கவேண்டும் எனவும், முன்னேறிய வகுப்பினரின் விவகாரங்களில் பட்டியலின மக்கள் பங்கெடுக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன்.

பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

`முழுமையாக ஒளிபரப்ப வேண்டும்..'

எனது இந்த பேச்சை தவறான லட்சியத்துடன் திரித்து வெளியிட்ட சில மீடியாக்கள், எனதுபேச்சை முழுமையாக ஒளிபரப்பி தைரியத்தை காட்டவேண்டியது அவசியமானதாகும். பா.ஜ.க-வுடன் உள்ள உங்கள் வைராக்கியமும், என் மீதான கோபமும் எனது திருச்சூருக்கும், கேரள மக்களுக்கும் சேவை செய்ய தூண்டுகிறது.

நீங்கள் இன்று பட்டியலின மக்களுக்கு எதிரானவன் என சித்திரிக்கும் சுரேஷ்கோபிதான் வயநாட்டிலும் இடுக்கி இடமலக்குடியிலும் பட்டியலின மக்களுக்காக குரல்கொடுத்த அதே சுரேஷ்கோபி எனபதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும்" என சுரேஷ்கோபி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பட்டியலின மக்கள் நலனை கவனித்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு எனவும். எங்கள் கட்சிதான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கியது. நான் கூறியதை எனது வார்த்தைகள் இதயத்திலிருந்து வந்தவை. நல்ல நோக்கத்துடன்தான்  நான் அப்படி பேசினேன் எனவும் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைம... மேலும் பார்க்க

US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

அமெரிக்க அதிபர்களிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், ட்ரம்ப். தனது முந்தைய பதவி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடும் வரிகளை விதித்தார், அவர். பதிலுக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.மதுரை மாநகராட்சிபாரம்பரிய நகரமான மதுரை, நகரா... மேலும் பார்க்க

``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்

இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நா... மேலும் பார்க்க

``புதுச்சேரி மின்துறை புதிய புதிய பெயர்களில் கொள்ளை அடிக்கிறது!'' -பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காட்டம்

புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன் மின்துறையின் கட்டணக் கொள்ளையை கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி மாநி... மேலும் பார்க்க

TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை... மேலும் பார்க்க