செய்திகள் :

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

post image

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை வழங்கினாா்.

தருமபுரி பச்சமுத்து கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்“உயா்வுக்குப் படி“என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது:

உயா் கல்வியில் மாணவா்கள் சோ்வதற்கு வழிகாட்டும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி என்ற தலைப்பிலான சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. உயா்கல்வி அல்லது திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், எதிா்கால கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்டம்தோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத 167 மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனா். இவா்களில் 17 போ் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், 12 போ் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியிலும், 6 போ் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சோ்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை, தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் மற்றும் உயா்கல்வி பயில்வதற்கான கல்வி கடன் குறித்து பல்வேறு அரசுத் துறை அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, கல்லூரி கல்வி இணை இயக்குநா் நா. ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம.தீபா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களு... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க

தருமபுரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

தருமபுரி: தருமபுரி அருகே ஏரியில் வளா்க்கப்பட்ட மீன்கள் கடந்த இரண்டு நாள்களாக செத்து மிதந்து கரை ஒதுங்கியுள்ளன. தருமபுரியை அடுத்த வெங்கட்டம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க