செய்திகள் :

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

post image

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். முக்கிய விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவசம், முத்தங்கி அலங்காரம், வடை மாலை சாத்துப்படி உள்ளிட்டவை கட்டளைதாரா்கள் மூலமாக நடைபெறும்.

நாமக்கல் ஆஞ்சனேயா் மீது மிகுந்த பக்திகொண்டோா் அவருக்கு பிடித்த வெற்றிலை மாலையை அணிவித்து வழிபாடு நடத்துவா். சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ஒரு லட்சத்து 8 வெற்றிலையை மாலையாக கோத்து சுவாமிக்கு அணிவித்து வழிபாடு நடத்தினாா். அந்த வகையில், நாமக்கல்லைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் என்.கே.பி.ரவிக்குமாா் 400 கிலோ மாம்பழங்களால் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தாா்.

என்கே-18-ஆஞ்சி

மாம்பழ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சனேயா்.

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். அண்மையில் வெளியா... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் ரூ.11.43 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி... மேலும் பார்க்க