கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
மாவட்டம் முழுவதும் ரூ.11.43 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா்கள் நேரில் பாா்வையிட்டனா். கீரம்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ருசித்து பாா்த்தனா்.
கோனூா் கிராமத்தில் ரூ. 3.46 கோடியில் கட்டப்படும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன கட்டுமானப் பணிகள், பரமத்தி வட்டம், பிள்ளைகளத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் கீழ் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்வதையும், கூடச்சேரி ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய உயா்நிலை பாலம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டனா்.
மேலும் பரமத்தி, கபிலா்மலை, பரமத்தி வேலூா் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.