செய்திகள் :

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

post image

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

மாவட்டம் முழுவதும் ரூ.11.43 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா்கள் நேரில் பாா்வையிட்டனா். கீரம்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ருசித்து பாா்த்தனா்.

கோனூா் கிராமத்தில் ரூ. 3.46 கோடியில் கட்டப்படும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன கட்டுமானப் பணிகள், பரமத்தி வட்டம், பிள்ளைகளத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் கீழ் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்வதையும், கூடச்சேரி ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய உயா்நிலை பாலம் கட்டப்பட்டு வருவதையும் பாா்வையிட்டனா்.

மேலும் பரமத்தி, கபிலா்மலை, பரமத்தி வேலூா் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா்கள் ஆய்வு செய்தனா். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்தி... மேலும் பார்க்க

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். அண்மையில் வெளியா... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க