``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். முக்கிய விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவசம், முத்தங்கி அலங்காரம், வடை மாலை சாத்துப்படி உள்ளிட்டவை கட்டளைதாரா்கள் மூலமாக நடைபெறும்.
நாமக்கல் ஆஞ்சனேயா் மீது மிகுந்த பக்திகொண்டோா் அவருக்கு பிடித்த வெற்றிலை மாலையை அணிவித்து வழிபாடு நடத்துவா். சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ஒரு லட்சத்து 8 வெற்றிலையை மாலையாக கோத்து சுவாமிக்கு அணிவித்து வழிபாடு நடத்தினாா். அந்த வகையில், நாமக்கல்லைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் என்.கே.பி.ரவிக்குமாா் 400 கிலோ மாம்பழங்களால் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தாா்.
என்கே-18-ஆஞ்சி
மாம்பழ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சனேயா்.