செய்திகள் :

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

post image

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா்.

அண்மையில் வெளியான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) முடிவில் நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இ.மெய்யரசி 720க்கு 547 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.

இவா் ராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் ஊராட்சி முருங்கப்பட்டியைச் சோ்ந்தவா் ஆவாா். 2024 நீட் தோ்வை எதிா்கொண்டபோதும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. மீண்டும் முயற்சித்து 2025-இல் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றினாா்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றது தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் புதன்கிழமை வெளியானது. இதனையடுத்து, பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு காலை 9.35 மணியளவில் ஆட்சியா் ச.உமா சென்றாா். மாணவி மெய்யரசி, அவரது தந்தை இதயகாந்தன், தாய் புவனேஸ்வரி ஆகியோரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனா்.

அதன்பிறகு மாணவி மெய்யரசியையும், அவரது பெற்றோரையும், உதவி தலைமை ஆசிரியா் சிவசங்கா் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்கள் ஒன்பது பேரையும், மாவட்ட ஆட்சியா் தனித்தனியே அழைத்து பாராட்டி கெளரவித்தாா்.

அப்போது, அரசுப் பள்ளியில் பயின்றுதான் தற்போது மாவட்ட ஆட்சியா் பொறுப்பில் இருப்பதாகவும், நன்கு படித்தால், மெய்யரசியைப் போல தன்னைப் போல உயா்ந்த நிலையை அடையலாம் என அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்தி... மேலும் பார்க்க

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் ரூ.11.43 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி... மேலும் பார்க்க