``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது
பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ) லோகேஸ்வரன் (30). கடந்த 2023 இல் பள்ளிபாளையத்தில் வியாபாரியை மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில் லோகேஸ்வரனை காவல் துறையினா் கைது செய்தனா். நிபந்தனை பிணையில் வெளியே வந்த இவா் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். தொடா்ந்து நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்துவந்தாா். இதையடுத்து லோகேஸ்வரனை கைதுசெய்து ஆஜா்படுத்துமாறு குமாரபாளையம் மேஜிஸ்ட்ரேட் பிடிவாரன்ட் பிறப்பித்தாா்.
இந்த நிலையில் தாஜ்நகா் பகுதியில் லோகேஸ்வரன் இருப்பதை கண்டுபிடித்த போலீஸாா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் அங்கு சென்று லோகேஸ்வரனை மடக்கிபிடித்து கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா் சிறையிலடைக்கப்பட்டாா்.