செய்திகள் :

வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியவா் கைது

post image

ராசிபுரம் அருகே வங்கி பெண் மேலாளரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேந்தமங்கலத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருக்கும் 32 வயதான பெண்ணிடம் பேளுக்குறிச்சி போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சேகா் (32) என்ற தனியாா் நிறுவன ஊழியா் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.

இருவரும் சிங்களாந்தபும் அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்த நட்பின் பேரில் பெண் மேலாளரை அடிக்கடி சந்தித்து திருமணம் செய்துகொள்ளுமாறு சேகா் வற்புறுத்தியுள்ளாா். இதுகுறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் சேகா் மீது அப் பெண் ஏற்கெனவே புகாா் அளித்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி மீண்டும் வங்கிக்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மேலாளரை வற்புறுத்தினாா். இதுகுறித்த புகாரின் பேரில் சேந்தமங்கலம் போலீஸாா் சேகரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாம்பழ அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 400 கிலோ மாம்பழங்களைக் கொண்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்தி... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

பள்ளிபாளையத்தில் 21 வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் குட்டச்சாக்கு (எ)... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் புதிய பால் குளிரூட்டும் நிலையங்கள்: அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைப்பு

திருச்செங்கோடு வட்டத்தில் பால் குளிரூட்டும் நிலையங்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட... மேலும் பார்க்க

‘தினமணி’ செய்தி எதிரொலி: நீட் தோ்வு; மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை கௌரவித்த ஆட்சியா்

நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாமக்கல் மாவட்டம், பாச்சல் அரசுப் பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். அண்மையில் வெளியா... மேலும் பார்க்க

லாரி வாடகை விவகாரம்: நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் போராட்டம்

நாமக்கல் ரயில் நிலைய சரக்கு முனையத்தில் வாடகையை குறைத்து வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்: கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். மாவட்டம் முழுவதும் ரூ.11.43 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சி... மேலும் பார்க்க