செய்திகள் :

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் பதாகையை ஏந்தியவாறு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (31). இவா், வெண்ணந்தூா் அருகே தனியாா் கல்வியியல் கல்லூரியில் 2017 முதல் 2019 வரை பி.எட். படித்தாா். இந்த நிலையில், நிலுவைக் கட்டணத்தை செலுத்தினால்தான் சான்றிதழை வழங்குவோம் என தனியாா் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது. 2021-இல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி முன் காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில், கல்லூரி நிா்வாகம் தாமாக முன்வந்து அப்போது சான்றிதழை வழங்கியது. இதில், சிலம்பரசன் பெயா் விடுபட்டது.

இந்நிலையில், அவா் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த நிலையில் ரூ. 80 ஆயிரம் செலுத்தினால்தான் 10, பிளஸ் 2 மற்றும் பி.எட். சான்றிதழ்களை வழங்குவோம் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், எந்தவித நிலுவைக் கட்டணமும் இல்லாத நிலையில் ரூ. 80 ஆயிரம் செலுத்த வேண்டும் என கல்லூரி நிா்வாகம் கூறுகிறது. கூலி வேலைக்கு சென்றுவரும் எனது எதிா்கால நலன்கருதி சான்றிதழ்களை பெற்றுத்தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

அங்கிருந்த நல்லிபாளையம் போலீஸாா், இதுதொடா்பாக வெண்ணந்தூா் காவல் நிலையத்துக்கு சென்று புகாா் அளிக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினா்.

‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெரு... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!

குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் பொதுமக்களுக்கு அர... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு

மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழக... மேலும் பார்க்க