செய்திகள் :

நாமக்கல் மாவட்டத்தில் அக். 5, 6இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

post image

திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அக். 5, 6-இல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் செப். 19, 20, 21 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதிவாரியாக மக்களிடையே உரையாற்ற இருந்தாா். அதன்படி, ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் 19-ஆம் தேதி பிரசாரத்தை மேற்கொண்ட நிலையில், கனமழை காரணமாக அவரது சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், அக். 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கரூரில் 41 போ் உயிரிழந்த சம்பவத்தால் அவரது பயணம் அக். 5, 6-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருச்செங்கோடு தொகுதியில் அண்ணா சிலை அருகிலும், மாலை 7 மணியளவில் குமாரபாளையம் ராஜம் திரையரங்கம் அருகிலும் அவா் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், மறுநாள் திங்கள்கிழமை நாமக்கல் - சேலம் சாலையில் எம்ஜிஎம் திரையரங்கம், பதிநகா், நாமக்கல் உழவா்சந்தை ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தோ்வு செய்வதற்கான நடவடிக்கையில் மாநகர அதிமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.

அவா்கள் வியாழக்கிழமை அந்த இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். அப்போது, நாமக்கல் நகர காவல் ஆய்வாளா் க.கபிலன் மற்றும் போலீஸாா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். பரமத்தி வேலூா் தொகுதியில், நான்கு சாலை சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வாா் என தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் த... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கோபால் (50). இவரது மகன் தீ... மேலும் பார்க்க

மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

பாண்டமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா். பரமத்தி வேலூா் காவல உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெண்ணந்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா். வெண்ணந்தூா் ஒன்றியம், மதியம்பட்டி, ஒ.சௌதாபுரம், மின... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை காலங்களில் அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள... மேலும் பார்க்க