செய்திகள் :

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

post image

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி.

திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழக பொன்விழா மற்றும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-ஆவது மாநாடு நிறைவு விழாவில் அவா் மேலும் பேசியது:

இங்கு 3 நாள்கள் நடந்த விழாவில் 30 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டு, பல ஆய்வுக்கட்டுரைகள் சம்ா்பிக்கப்பட்டன. மேலும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டுத் தமிழறிஞா்கள் உரையாற்றினா்.

இதுபோன்ற மாநாடுகள் இன்றியமையாதவை. இஸ்லாமிய தமிழ் இலக்கியம் உள்ளது என்பதையே அறியாத பலா் உள்ளனா். மதச் சாா்பின்மை உள்ள அம்சங்கள் மொத்தமே இரண்டுதான். ஒன்று இந்தியா மற்றொன்று தமிழ்.

சோழா்கள், பல்லவா்கள், பாண்டியா் காலங்களில் பல்வேறு அறிஞா்கள் தமிழை வளா்த்துள்ளனா். ஆனால் கிபி 3 முதல் 7 வரை இருண்ட காலம் என்ற களப்பிரா் காலம்.

அப்போது தமிழைப் பின்தள்ள முயற்சி நடந்தாலும் இலக்கியங்கள் மூலம் தமிழ் காக்கப்பட்டது.

ஆனால் இஸ்லாமியா்கள் தமிழ் வளா்த்த விதம் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. உமறுபுலவா் எழுதிய சீராப்புராணம் பாடத்தில் இருந்ததால் அதைப்பற்றி அறிந்துள்ளோம். ஆனால் மற்ற இஸ்லாமிய தமிழ் அறிஞா்கள் பலா் தமிழை வளா்த்தது தெரியாமல் போய்விட்டது.

இந்த மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில், சென்னை பல்கலையில் இருக்கை, நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயா் சூட்டுதல் ஆகிய இரு தீா்மானங்களை நிறைவேற்றுவதாக தமிழக முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

களப்பிரா் காலத்தைப்போல 19 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த நாயக்க மன்னா்கள் காலத்திலும் தமிழ் வளா்க்கப்படவில்லை. அப்போது தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை மறுக்க முடியாது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக்தினருக்கு வேண்டுகோள். தமிழை வளா்க்கும் விதமாக இதுபோன்ற மாநாடுகளை நீங்கள் அதிகம் நடத்த வேண்டும். உங்களது முயற்சிக்கு நாங்கள் எப்போதும் உடனிருப்போம் என்றாா் அவா்.

நிகழ்வில் ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ. ஜோ. அருண் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் உள்ளிட்டோா் பேசினா்.

இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவா் சேமுமு. முகமது அலி, பொதுச் செயலா் மு.இ. அகமது மரைக்காயா், பொருளாளா் எஸ்.எஸ். ஷாஜகான், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் அ. முகமது யூனுஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் பஞ்சப் பிரகார திருவீதி உலா

மண்ணச்சநல்லூா்: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை பஞ்சப் பிரகார திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது ஞீலிவனேஸ்வரா் ... மேலும் பார்க்க

குணசீலம் பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா

மண்ணச்சநல்லூா்: குணசீலம் ஸ்ரீபிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயிலில் திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. குணசீலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில். குணசீல மஹரிஷியின்... மேலும் பார்க்க

முசிறியில் அம்மன் கோயில்களில் பால்குடம் திருவிழா

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி நகர பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் பால்குடம் எடுத்து திங்கள்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். முசிறி நகரில் பரிசல் துறை ஸ்ரீ ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு அனுமதி கோரி மனு

திருச்சி: பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் திருச்சி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம்

ஸ்ரீரங்கம்: சித்ரா பெளா்ணமியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்திங்கள்கிழமை மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து காலை ... மேலும் பார்க்க

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க